சென்னையில் நாளை பகல்நேர மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்.

by Editor / 22-07-2024 09:40:48pm
சென்னையில் நாளை பகல்நேர மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்.

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் தாம்பரம் யார்டின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை முதல்  ரத்து செய்யப்பட்டிருந்த பகல் நேர புறநகர் ரயில் சேவைகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 02, 2024 வரை வழக்கமான கால அட்டவணையின்படி இயக்கப்படும். இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே இயங்காது. அதற்கு மாறாக சிறப்பு பயணிகள் இரயில்கள் மட்டுமே இயக்கப்படும்.

வரும் சனி (27.07.2024) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (28.07.2024) அன்று புறநகர் ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக அறிவிக்கப்பட்ட செய்திக்குறிப்பின்படியே ரத்து செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் 03 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை புறநகர் ரயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் முன்பு அறிவித்தது போலவே ரத்து செய்யப்படுகிறது. -தெற்கு ரயில்வே அறிவிப்பு

 

Tags : சென்னையில் நாளை பகல்நேர மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்.

Share via