ரயில் பாதையில் நின்று ரீல்ஸ்: வந்தே பாரத் ரயிலில் மோதி 4 பேர் உயிரிழந்தனர்.
பீகாரில் ஜோக்பானி - தனாபூர் இடையே அதிவேகமாக வந்த வந்தே பாரத் ரயிலில் மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (அக்.3) அதிகாலையில், மாணவர்கள் 5 பேர் ரயில் பாதையில் நின்று ரீல்ஸ் எடுத்துள்ளனர். அப்போது ரயில் மோதியதில், 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : ரயில் பாதையில் நின்று ரீல்ஸ்: வந்தே பாரத் ரயிலில் மோதி 4 பேர் உயிரிழந்தனர்.



















