மின்னல் தாக்கி பெண் பலி: 3 பேர் படுகாயம்
![மின்னல் தாக்கி பெண் பலி: 3 பேர் படுகாயம்](Admin_Panel/postimg/3 minal.jpg)
தஞ்சை ஒரத்தநாடு அருகே வடக்கு நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வனின் மனைவி சரிதா. கலைச்செல்வன் இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். பின்பு தனது மகளுடன் வசித்து வந்த சரிதா தனது மூன்றாவது மகள் திருமணத்திற்காக தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் தலையமங்கலம் ரோடு கண்ணந்திக்குடி அருகே வரும் பொழுது திடீரென மழை பெய்தது. மழைக்காக அவர்கள் ஒரு மரத்தின் கீழே ஒதுங்கி நின்றனர். அதேசமயம் வடுவூரை சேர்ந்த மற்றொரு தம்பதியினரும் அந்த மரத்தின் கீழ் மழைக்காக ஒதுங்கி நால்வரும் நின்றனர். அப்பொழுது திடீரென மின்னல் தாக்கி நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் வடுவூர் தம்பதியினர் மற்றும் சரிதாவின் உறவினர் பலத்த காயமடைந்தனர். சரிதா சம்பவ இடத்திலேயே படுகாயத்துடன் உயிரிழந்தார்.
Tags :