கோவில்பட்டியில் 2 பேர் வெட்டி படுகொலை!

by Editor / 07-06-2024 09:33:59am
கோவில்பட்டியில்  2 பேர் வெட்டி படுகொலை!

கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (50). இவர் மீன்கடை நடத்தி வந்துள்ளார். வழக்கமாக இரவில் மீன் கடையில் வெள்ளத்துரை தூங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமி என்பவரையும் வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரையை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து இரு உடல்களும் உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : கோவில்பட்டியில் 2 பேர் வெட்டி படுகொலை!

Share via