நீட் தேர்வு தேவை கிடையாது, அது சமூக நீதிக்கு எதிரானது-அன்புமணி ராமதாஸ்

by Editor / 11-06-2024 11:57:26pm
நீட் தேர்வு தேவை கிடையாது, அது சமூக நீதிக்கு எதிரானது-அன்புமணி ராமதாஸ்

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாளை மறுநாள் (வியாழக்கிழமை)நடைபெறும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்


நீட் தேர்வு தேவை கிடையாது, அது சமூக நீதிக்கு எதிரானது, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது, ஏழை மக்களுக்கு எதிரானது. அதில் பல குளறுபடிகள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. எனவே இந்தியாவில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் குறைந்தபட்சம் தமிழகத்தில் யாவது இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு நிச்சயமாக எய்ம்ஸ் வரவேண்டும் மதுரையில் நிச்சயம் எய்ம்ஸ் வரும் என அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

 

Tags : நீட் தேர்வு தேவை கிடையாது, அது சமூக நீதிக்கு எதிரானது-அன்புமணி ராமதாஸ்

Share via