கஞ்சா சப்ளை செய்த காவலர் கைது

by Editor / 14-06-2024 12:24:05am
கஞ்சா சப்ளை செய்த காவலர் கைது

மதுரையில் கஞ்சா விற்பனை செய்த சுப்புராஜ் என்பவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தனிப்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமைக் காவலர் பாலமுருகனிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். உடனே தலைமைக் காவலர் பாலமுருகனிடம் விசாரணை நடத்தியதில், சுப்புராஜ் கூறியது உண்மை என்பது தெரியவந்தது. அதனையடுத்து காவலர் பாலமுருகனும் கைது செய்யப்பட்டார்.

 

Tags : மதுரையில் கஞ்சா விற்பனை காவலர் பாலமுருகனும் கைது

Share via