படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் மாயம்

by Staff / 16-06-2024 01:59:40pm
படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் மாயம்

பீகார் மாநிலம் பாட்னாவில் இன்று  கங்கா தசரா விழா நடைபெற்றது. இதனையொட்டி, அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சிலர் கங்கை ஆற்றில் குளித்தனர். பின்னர், அவர்கள் படகில் 17 பேர் ஏறி அந்த ஆற்றைக் கடந்தனர். அப்போது, ​​எதிர்பாராத விதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. இந்த விபத்தில் 11 பேர் நீந்தி உயிர் தப்பிய நிலையில் 6 பேர் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், நீரில் மூழ்கியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via