விளாத்திகுளத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றம்!

by Editor / 28-06-2021 07:35:51pm
விளாத்திகுளத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றம்!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் அ.இ.அ.தி.மு.க.மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர், ரூபம் வேலன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சசிகலா அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என்பது உட்பட சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் ஓபிஎஸ் - அணி எடப்பாடி அணி என்ற இருபிரிவுகள் உள்ளது. மேலும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளார்.இவர் கோவில்பட்டியை தவிர்த்து பிற பகுதிகளில் கவனம் செலுத்தவில்லை என கட்சித் தலைமைக்கு நிர்வாகிகள் புகார் அளித்து வந்தனர். கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து வந்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்டம் போல மேலும் பல மாவட்டங்களில் சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாம். சசிகலா, அதிமுக தொண்டர்களிடம் பேசும்போது, எடப்பாடிக்கு எதிராக பேசுகிறார். இது அதிமுகவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆடியோக்கள் தாக்கத்தால்தான் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக கூறப்படுகிறது. 

 

Tags :

Share via