சமையல் செய்தபோது தீப்பிடித்து பெண் பலி
கோவை சூலூர் பகுதியில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்ததில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கோவை சூலூர் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 60). இவரது மனைவி சரஸ்வதி (57). இவர்கள் இருவரும் அதே பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சரஸ்வதி வீட்டில் கேஸ் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்து கொண்டது.
தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
பின்னர் அவரை மீட்டு கோவை அரசு உயர் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :