by Staff /
10-07-2023
03:32:45pm
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஜூலை 10 ஆம் தேதி அதிகாலை பயங்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லியான்ஜியாங் கவுண்டியில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் 25 வயது இளைஞர் புகுந்து பலரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து இன்னும் சிலர் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குற்றவாளிகளை கைது செய்தனர். ஆனால் அவர்கள் எதற்காக தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து காரணம் தெரியவில்லை.
Tags :
Share via