புளியங்குடியில்  பள்ளிஆசிரியை வீட்டில் வைத்து  தூக்கிட்டு தற்கொலை

by Editor / 23-06-2024 12:15:59am
புளியங்குடியில்  பள்ளிஆசிரியை வீட்டில் வைத்து  தூக்கிட்டு தற்கொலை

 தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட டி.என். புதுக்குடி பகுதியை சேர்ந்தவர் உமாதேவி இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில்(இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ரவிக்குமாரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இறந்த ஆசிரியை உமாதேவி அந்த அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டு வருடங்களாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் உமாதேவி நேற்று மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு  அவரது கணவரும் அவருடன் வந்துள்ளார் .சாப்பிட்டு முடித்த பிறகு அவரது கணவரை   நீங்கள் பள்ளிக்கு செல்லுங்கள் நான் பிறகு வருகிறேன் என்று கூறியதாக கூறப்படுகிறது .

 இதனை தொடர்ந்து  அவரது கணவரும் பள்ளிக்கு சென்று விட்டதாகவும்  நீண்ட நேரம் ஆகியும்  ஆசிரியை உமாதேவி   வரவில்லை என்பதால்  அவர் கணவர் வீட்டுக்கு சென்று பார்த்த பொழுது சமையலறையில் ஆசிரியை உமாதேவி தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.

 இதனை தொடர்ந்து அவரது கணவர் மனைவி தூக்கில் தொங்கியபடி கடந்து அதிர்ச்சி அடைந்து அலறியுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினரும் அக்கம் பக்கத்தினரும் தூக்கியபடி கிடந்த ஆசிரியை உமாதேவியை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அங்கே அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.
 இதனை தொடர்ந்து காவல்துறையினர் இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 மேலும் ஆசிரியை உமாதேவி மன அழுத்தம் காரணமாக தூக்கில் தூங்கினாரா? இல்லை பள்ளி நிர்வாகம் டார்ச்சர் எதுவும் கொடுத்ததா? இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : புளியங்குடியில்  பள்ளிஆசிரியை வீட்டில் வைத்து  தூக்கிட்டு தற்கொலை

Share via