கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் 2 பேர் கைது .

by Editor / 23-06-2024 09:31:25am
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் 2 பேர் கைது .

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான மாதேஷ் நண்பர்களான ஹோட்டல் உரிமையாளர் சக்திவேல், மீன் வியாபாரி கண்னன் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில் மாதேஷுக்கு மெத்தனால் கடத்த உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. சக்திவேல் பண்ருட்டி பகுதியில் ஹோட்டல் மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கண்ணன் மீன் வியாபாரம் செய்து கொண்டே கள்ளச்சாராயம் கடத்தி வந்துள்ளார்.

 

Tags : கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் 2 பேர் கைது.

Share via