இயற்கை உபாதை கழிக்கச்சென்ற பெண் கூட்டு பலாத்காரம்

by Staff / 24-06-2024 04:41:43pm
இயற்கை உபாதை கழிக்கச்சென்ற பெண் கூட்டு பலாத்காரம்

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் ஈப்புருபாலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்டர்ஷிப் படித்து முடித்துவிட்டு வீட்டில் தையல் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 22) அதிகாலை இயற்கை உபாதை கழிக்கச்சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவரை காணாததால் அவரை பெற்றோர் தேடி அலைந்தனர். பின்னர் அங்குள்ள பள்ளியின் அருகே உடலில் துணி இல்லாமல் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா போதையில் இருந்த தேவரகொண்டா விஜய், தேவரகொண்டா காந்த் மற்றும் மகேஷ் ஆகியோர் இளம்பெண்ணை கடத்திச்சென்று கூட்டுபலாத்காரம் செய்ததாக தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via