வெடிபொருள் தயாரிக்கும் மூலப் பொருள் வெடித்து விபத்து

by Staff / 30-06-2024 03:08:19pm
வெடிபொருள் தயாரிக்கும் மூலப் பொருள் வெடித்து விபத்து

சிவகங்கை அருகே அரசேனரீ கீழமேடு என்ற கிராமத்தில் மோட்டார் பம்பு செட்டு அருகே உள்ள ஒரு ஓட்டு வீட்டில் இரண்டு கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அரவிந்தன் என்பவர் அவ்வப்போது வந்து சென்றுள்ளார். இவர் வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை இந்த ஓட்டு வீட்டில் சேகரித்து வைத்திருந்தார். இந்த நிலையில் கடும் வெப்பத்தால் திடீரென வெடி மருந்து வெடித்து சிதறியதில் ஓட்டு வீடு முழுவதும் பலத்த சேதம் அடைந்ததோடு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அச்சமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசார் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அரவிந்தன் என்ற இளைஞரை தற்போது கைது செய்து காலை சுமார் 11 மணியளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via