நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரை முருகனை விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

by Editor / 11-07-2024 10:14:19pm
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரை முருகனை விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகியான சாட்டை துரைமுருகன் அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம், வீராணம் பகுதியில் தற்போது வீடு ஒன்று கட்டி வருவதாக கூறப்படுகிறது.வீடு கட்டும் பணியை பார்ப்பதற்காக கடந்த 9 ஆம் தேதி  தென்காசி மாவட்டத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தென்காசி நகரப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளதனியார் ஹோட்டலில் நள்ளிரவில் வந்து தங்கி இருந்த நிலையில், இன்று காலை 8.20மணி அளவில் அவரை திருச்சி போலீசார் ஹோட்டலில் வைத்து கைது செய்து அழைத்து சென்றனர்.

 கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் முன்னிலையில் துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நீதிமன்ற காவலுக்கு அனுப்ப தேவையில்லை என உத்தரவிட்டார். மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

 

Tags : நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரை முருகனை விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Share via