முன்னாள் முதல்வரின் செய்தி தொடர்பாளரால் பாலியல் பலாத்காரம்

by Staff / 17-09-2022 03:57:40pm
முன்னாள் முதல்வரின் செய்தி தொடர்பாளரால் பாலியல் பலாத்காரம்

பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் ரிஸ்வான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர்.

தனது பிள்ளைகளின் தந்தை டேனிஷ் ரிஸ்வான் எனவும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகாரின் பேரில் பாட்னாவில் உள்ள தலைமைச் செயலக காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

11 ஆண்டுகளுக்கு முன்பு டேனிஷ் ரிஸ்வான் தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கூறுகிறார். 2011-ம் ஆண்டு பாட்னாவுக்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்தது. அப்போது டேனிஷ் தொலைக்காட்சி ஒன்றில் நிருபராக இருந்தார். வேலை முடிந்து வீடு திரும்பும் போது ரயிலை தவறவிட்டதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

ரயில் நிலையத்தில், டேனிஷிடம் உதவி கேட்டு, டேனிஷ், அவரை, தன் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, போதைப்பொருள் கலந்த உணவை கொடுத்து, பலாத்காரம் செய்ததாக, புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் குழந்தையின் டிஎன்ஏ சோதனை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via