சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பதற்கு அத்தாட்சி: எடப்பாடி பழனிசாமி

by Staff / 04-08-2024 02:59:58pm
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பதற்கு அத்தாட்சி: எடப்பாடி பழனிசாமி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், ஆடிப்பெருக்கன்று காவிரி ஆற்றங்கரையில் கொலை நடப்பது என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு அத்தாட்சி என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via