செங்கல்பட்டுக்கு கடத்திய மது பாட்டில்கள் ஜீப்புடன் பறிமுதல்

by Staff / 13-04-2023 04:48:07pm
செங்கல்பட்டுக்கு கடத்திய மது பாட்டில்கள் ஜீப்புடன் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டிற்கு ஜீப்பில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலையில், கிளியனுார் செக்போஸ்டில், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த பொலிரோ ஜீப்பை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அதில், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் கார் ஓட்டி வந்த செங்கல்பட்டு அடுத்த தையூர் ஜெய்சங்கர் மகன் காமேஷ், 28; என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் புதுச்சேரியில் இருந்து செங்கல்பட்டில் நடக்கவுள்ள விசேஷத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ரூ. 13 ஆயிரம் மதிப்புள்ள 90 மி. லி கொண்ட 192 பாட்டில்கள், 17 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து, கோட்டக்குப்பம் கலால் போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்

 

Tags :

Share via