கேரளாவில் டிக் பிளே காய்ச்சலால் பாதிப்பு

by Staff / 26-07-2024 12:05:05pm
 கேரளாவில் டிக் பிளே காய்ச்சலால் பாதிப்பு

எலிக்காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து, கேரளாவில் தற்போது டிக் பிளே பாதிப்புகள் (ஒட்டுண்ணிகளால் ஏற்படும் தொற்று) அதிகரித்து வருகின்றன. ஜூலையில் மட்டும், 88 நபர்கள் ஸ்க்ரப் டைபஸ் என்று அழைக்கப்படும் டிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுள்ளனர். ஜூன் மாதத்தில் 36 பேரும், மே மாதத்தில் 29 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார். தலைவலி, சிவந்த கண்கள், தொண்டை வலி அறிகுறிகள் இருக்கும்.

 

Tags :

Share via