புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ரூ.15 கோடி 40 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா.

by Editor / 27-07-2024 09:42:02am
புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ரூ.15 கோடி 40 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா.

தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை புதிய மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் நகராட்சி சமுதாயக்கூடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் மன்னம்பந்தல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ரூ.15 கோடி 40 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் அடிக்கல்நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

 

Tags : புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ரூ.15 கோடி 40 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா.

Share via