உயிருடன் எரிந்து சாம்பலாகிய தம்பதி

by Editor / 03-08-2024 12:24:29pm
உயிருடன் எரிந்து சாம்பலாகிய தம்பதி

உத்திரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் தம்பதி உயிருடன் எரிந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தேவ்பால் சிங் (52) என்பவர் தனது மனைவி மீனா சிங் (49) உடன் படான்-ததாகஞ்ச் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது உயர் அழுத்த மின் கம்பிகள் அறுந்து அவர்கள் மீது விழுந்துள்ளது. இதனால், தம்பதியர் சம்பவ இடத்திலேயே உயிருடன் எரிந்து சாம்பலாகினர். இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவர்களது உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

 

Tags :

Share via