ஜெயக்குமார் கொலை வழக்கில் முக்கிய தடயம்

by Staff / 10-05-2024 01:35:05pm
ஜெயக்குமார் கொலை வழக்கில் முக்கிய தடயம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இருந்து கத்தி மீட்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கிணற்றில் இருந்து தடயங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வழக்கின் முக்கிய தடயங்கள் கிணற்றில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இதற்காக 17 மணிநேரமாக கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via