இந்திய சீன எல்லையில் குவிக்கப்படும் படைகள்

by Editor / 07-07-2021 08:17:26am
இந்திய சீன எல்லையில் குவிக்கப்படும் படைகள்

கடந்த ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையிலான மோதல் தொடங்கியதிலிருந்து எல் ஏ சி, (அசல் கட்டுப்பாட்டுக் கோடு)-யில் பதற்றம் நிலவியது.

இந்தப் பதற்றம் காரணமாக, எல்லைப்பகுதியில் சீனாவைப் போல் இந்தியாவும் பெரிய அளவிலான உள்கட்டமைப்பை அதிகரிக்க வேண்டும் என்று மூலோபாய வல்லுநர்கள் சிலர் கருதுகிறார்கள்.

இன்னும் சில வல்லுநர்கள், சீனா இந்தியாவின் எல்லையில் திடீரென்று எல்லாவற்றையும் உருவாக்கவில்லை; கடந்த இரண்டு தசாப்தங்களில், அது படிப்படியாக உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்று கூறுகிறார்கள்.

அண்மையில், ப்ளூம்பெர்க்கில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், சீன எல்லையில் இந்தியா, தனது துருப்புக்களின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

"இந்தியா 50 ஆயிரம் கூடுதல் துருப்புக்களை 'அசல் கட்டுப்பாட்டுக் கோட்டு' (எல்ஏசி) பகுதியில் நிறுத்தியுள்ளது." என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு தரப்பிலிருந்தும் இவ்வளவு பெரிய அளவில் துருப்புகளை நிறுத்துவது கவலை அளிக்கிறது என்று இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவு முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ். ஹூடாவை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via