மீண்டும் மவுசு கூடும் பிஎஸ்என்எல் அதிகரிக்கும் வாடிக்கையாளர்எண்ணிக்கை.

by Editor / 03-08-2024 11:46:58pm
மீண்டும் மவுசு கூடும்  பிஎஸ்என்எல் அதிகரிக்கும் வாடிக்கையாளர்எண்ணிக்கை.

இந்தியாவில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மக்களவையில் தகவல் தெரிவித்துள்ளார். ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் சேவை கட்டணங்களை உயர்த்தியதால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறியுள்ளனர். இதன் காரணமாக, அந்நிறுவனங்களுக்கு அலைபேசிக்கு அழைத்து இலவச 4ஜி,சிம்மை பெற்று செல்லுமாறு பிஎஸ்என்எல் நிறுவனம் தங்ககளது வாடிக்கையாளர்களின்அலைபேசி எண்ணுக்கு அழைத்து தெரிவித்துவருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் சிம்கார்டில்  5ஜி ரெடி என அச்சிட்டு வழங்குவதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் நிறுவனம் விட்டு நிறுவனம் மாறத்தொடங்கியுள்ளனர்.

 

Tags : மீண்டும் மவுசு கூடும் பிஎஸ்என்எல் அதிகரிக்கும் வாடிக்கையாளர்எண்ணிக்கை.

Share via