வேண்டுகோளுக்கிணங்க ஹசீனாவுக்கு அடைக்கலம்: ஜெய்சங்கர்

by Staff / 06-08-2024 04:09:42pm
வேண்டுகோளுக்கிணங்க ஹசீனாவுக்கு அடைக்கலம்: ஜெய்சங்கர்

ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அவருக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்துள்ளோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். மாநிலங்களவையில் உரையாற்றிய ஜெய்சங்கர், "வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாக நட்பு நாடாக உள்ளன. வங்கதேசத்தில் வன்முறை வெடித்து நிலைமை மோசமானதால் ஹசீனாவின் விமானம் இந்தியா வர அனுமதித்தோம். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஹசீனா இந்தியா வந்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via