காந்தியை அவமதித்தவர் மீது மதுரையில் வழக்குப்பதிவு

by Staff / 17-08-2024 05:28:17pm
காந்தியை அவமதித்தவர் மீது மதுரையில் வழக்குப்பதிவு

மதுரை காமராஜர்புரம் வேல்முருகன். பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி மாநில செயலாளர். இவர் கடந்த ஆக.,11ல் மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார். அதில், கல்யாண சுந்தரம் என்ற முகநுால் பெயரில் காந்தியை அவதுாறாக குறிப்பிட்டு அவரது கையில் அரிவாள் உள்ளது போல் பதிவிட்டு, காந்திய கொள்கையை பின்பற்றுபவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என புகார் அளித்து இருந்தார்.

 சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆக.,19ல் காந்தி மியூசியம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் கல்யாணசுந்தரம் மீது ஒரு நபரை வேண்டுமென்றே அவமதித்தல், பகை, வெறுப்பு, தவறான உணர்வுகளை ஏற்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின்கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கல்யாணசுந்தரம் யார், எந்த ஊரசை் சேர்ந்தவர் என விசாரணை நடைப்பெற்று வருகிறது.

 

Tags :

Share via