வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வெளியானது

by Staff / 29-06-2024 01:50:47pm
வெடிவிபத்து: உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் வெளியானது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில், மூலப் பொருள் கலவையில் ஏற்பட்ட ஊராய்வின் காரணமாக இன்று (ஜூன் 29) வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.'குரு ஸ்டார்' எனும் பெயரில் செயல்பட்டு வரும் ஆலையில் தான் விபத்து நடந்தது. இதில் இறந்தவர்களின் பெயர்கள் ராஜ்குமார் (41), மாரிச்சாமி (40), செல்வக்குமார் (43), மோகன் (50) என தெரியவந்துள்ள நிலையில் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via