இருசக்கர வாகனம் மோதல் இருசக்கர வாகனத்தில் சென்ற சாலை பணியாளர் சம்பவ இடத்திலேயே பலி.

by Admin / 18-08-2024 11:28:32pm
இருசக்கர வாகனம் மோதல் இருசக்கர வாகனத்தில் சென்ற சாலை பணியாளர் சம்பவ இடத்திலேயே பலி.

எட்டயாபுரம் அருகே உள்ள வெம்பூர் பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவர் மகன் குருசாமி (50) இவர் சாலை பணியாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக பந்தல்குடியை நோக்கி தூத்துக்குடி மதுரை தேசிய நான்கு வழி சாலையில் ஓரமாக சென்று கொண்டு இருந்துள்ளார்.

அப்போது  உடன்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் ஆறுமுகம் மற்றும் அவரது  தம்பி லட்சுமி சங்கர் ஆகியோர் தனது நான்கு சக்கர காரில் வேகமாக வந்துள்ளனர். அந்நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குருசாமி திடீரென எதிர்பாராத விதமாக வலது பக்கம் திரும்ப முயற்சித்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத காரை ஓட்டி வந்த  ஆறுமுகம் குருசாமி மீது மோதி விடாமல் இருக்க வாகனத்தை நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அதற்குள் ஆறுமுகத்தின் கார் குருசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டடுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து  தகவல் அறிந்து விரைந்து வந்த மாசார்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி இறந்து கிடந்த குருசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக எட்டயாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக காரை ஓட்டி வந்த ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி லட்சுமி சங்கர் ஆகியோரிடம் மாசார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனது  இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக செல்கிறேன் என்று தனது வீட்டில் கூறிவிட்டு வந்த நபர் சென்ற 5 நிமிடங்களில் விபத்தில் பலியானதாக வந்த தகவலைத் தொடர்ந்து வெம்பூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து கண்ணீருடன் கதறி அழுதது  காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

 

இருசக்கர வாகனம் மோதல் இருசக்கர வாகனத்தில் சென்ற சாலை பணியாளர் சம்பவ இடத்திலேயே பலி.
 

Tags :

Share via