14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரிக்கு சிறை

by Staff / 20-08-2024 12:24:06pm
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பூசாரிக்கு சிறை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கொழுமம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் என்ற கோவில் பூசாரி, கடந்த 2021-ம் ஆண்டு கோவிலுக்கு சாமி கும்பிட வந்த 14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரில் அய்யப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அய்யப்பனுக்கு 40 ஆண்டுகள் சிறை ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

 

Tags :

Share via