அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி - செல்லூர் ராஜு விமர்சனம்

by Staff / 21-08-2024 01:38:23pm
அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி - செல்லூர் ராஜு விமர்சனம்

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "கள்ளர் சீரமைப்பு துறையை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்கும் வகையில் அரசாணை வெளியிட்டதாக தகவல் வந்துள்ளது, தமிழக அரசு கள்ளர் சீரமைப்பு துறையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் மதுரையில் உண்ணாவிரதம் நடைபெருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் உள்ள பிரமலை கள்ளர் சமுதாய மக்கள் பாதிக்கப்படுவர்கள், கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், விடுதிகள் மூடப்படவுள்ளது. விமர்சனத்திற்கு ஒரு எல்லை வேண்டும் என சொன்ன அண்ணாமலை திமுகவினரை மிக கேவலமாக பேசி உள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட துறைகளுக்கு பயந்து மத்திய அரசை அழைத்து விழா நடத்தி உள்ளனர், அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என மீண்டும் நிரூபணம் செய்து விட்டார், எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்த அண்ணாமலை அரைவேக்காட்டு தனமாக பேசி வருகிறார், நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு இன்னும் வரவில்லை, ஒரு இளைஞர் அரசியலுக்கு வருவதை திமுக அரசு தடுக்கிறது, தமிழகத்தில் திமுகவை தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது என நினைக்கிறது, த. வெ. க நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏன் திமுக அரசு அனுமதி மறுக்கிறார்கள்? இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என கூறினார்.

 

Tags :

Share via