தமிழ்நாட்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் வகுப்பு 3-ஐ சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களை சேர்ந்த நான்கு பேருக்கு பணியிட மாறுதல் வழங்கி அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதே போல மூன்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியக்கோடி உள்ளிட்டோர் இதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
Tags :