அரக்கோணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் வீட்டில் சடலமாக கண்டெடுப்பு. கொலையா?

by Editor / 07-09-2024 10:38:31am
அரக்கோணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த  தாய், மகள் மற்றும் மகன் வீட்டில் சடலமாக கண்டெடுப்பு. கொலையா?

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஓரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் வீட்டில் சடலமாக கண்டெடுப்பு. கொலையா? தற்கொலையா என அரக்கோணம் நகர காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம் சுவால்பேட்டை காந்தி ரோட்டில் வசிப்பவர் விஜயன். இவர் ஜோதி நகரில் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி மினாட்சி(45). இவர் வளர்புரம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணிப்புரிந்து வந்தார். இவர்களது  மகள் பவித்ரா(25), இவர் கம்யூட்டர் மையத்தில் பணிப்புரிந்து வந்தார். இவர்களது  மகன் யுனேஷ்(20). இவர் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிப்புரிந்து வந்தார்.

 இந்நிலையில் நேற்றிரவு உறவினர்கள் விஜயன் வீட்டினருக்கு போன் செய்தபோது நால்வரது போனும் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது.இதனால் சந்தேகமடைந்த உறவினர் வளர்புரத்திலிருந்து விரைந்து வந்து பார்த்தபோது வீடு உள்ளே தாழ்ப்பாளிடப்பட்டிருந்து. அதிகாலையில் அரக்கோணம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முவரும் சடலமாக வீட்டில் கண்டெடுக்கப்பட்டனர்கள்.

உடனடியாக  உடல்களை கைப்பற்றிய அரக்கோணம் நகர காவல்துறையினர் மினாட்ஷி, பவித்ரா, யுனேஷ் ஆகியோரது உடல்களை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து  கொலையா? தற்கொலையா என விசாரனை நடத்தி வருகின்றனர். 

மேலும் தலைமறைவாக உள்ள விஜயனை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் முவரும் குடும்ப தகராறு காரணமாக இறந்தார்களா அல்லது கடன் தொல்லையா அல்லது சாப்பாட்டில் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டனரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

 

Tags : தாய், மகள் மற்றும் மகன் வீட்டில் சடலமாக கண்டெடுப்பு. கொலையா?

Share via