வேளாங்கண்ணி தேர் திருவிழா ; காலைமுதல் குவியும் பக்தர்கள்.

by Editor / 07-09-2024 10:40:30am
வேளாங்கண்ணி தேர் திருவிழா ; காலைமுதல் குவியும் பக்தர்கள்.

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று மாலை நடைபெறுகிறது.தேர் பவனி நிகழ்வில் பங்கேற்க வேளாங்கண்ணியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்,பேராலய முகப்பு, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அலங்கரிக்கப்பட்ட மிக்கேல் அதிதூதர்,செபஸ்தியார் ,சூசைப்பர் ,உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகிய ஏழு தேர்களை கோவாவில் இருந்து வந்த கொங்கணி இன பெண்கள் சுமந்து செல்வது விழாவின் கூடுதல் சிறப்பு 

தேர் பவனி நிகழ்வில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருவதால் அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் தலைமையில் 4 மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags : வேளாங்கண்ணி தேர் திருவிழா ; காலைமுதல் குவியும் பக்தர்கள்

Share via