சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி அண்ணன் தம்பி பலி.

by Editor / 03-09-2024 10:30:26am
சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி அண்ணன் தம்பி பலி.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அத்திமரத்துபள்ளம் பகுதியைச் சேர்ந்த சாமுடி மகன்கள் ராஜேஷ் (54) ரமேஷ் (50) இருவரும் பிளம்பர் வேலை செய்து வருகின்றனர் 

இந்த நிலையில் நேற்று திருப்பத்தூருக்கு வேலைக்காக வந்திருந்தனர் பின்னர் வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு  திரும்பவும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய நிலையில் 

திருப்பத்தூர் மாவட்டம்  ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் கிருஷ்ணகிரிக்கு ஜெல்லி ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது ஈச்சர் லாரியில் டீசல் காலியாகி கந்திலி அருகே உள்ள கல்லேரி பகுதியில்  நின்றது.

அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த ராஜேஷ் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தை நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது அதி வேகமாக மோதியதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் அறிந்த கந்திலி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
வேலைக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் ஈச்சர் லாரியின் பின்புறம் மோதி அண்ணன் தம்பிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி அண்ணன் தம்பி பலி.

Share via