மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு மருத்துவர் கைது

by Staff / 03-09-2024 03:00:29pm
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு மருத்துவர் கைது

திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் சிலர் விடுதியில் தங்கியுள்ளனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் கிரேஸ் சகாயராணியின் மகன் சாம்சன், லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக உள்ளார். இவர், மாணவிகள் விடுதிக்கு அடிக்கடி சென்று அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது போல 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சாம்சனை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories