வழக்கறிஞர் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய கஞ்சா போதை ஆசாமி

திண்டிவனம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் குட்டி என்கின்ற ராகவன் பாமக முன்னாள் மாவட்ட தொண்டரணி செயலாளர் இவரது மனைவி ரேவதி வழக்கறிஞர் இவர்களின் இரண்டு பேர் அலுவலகம் துலுக்கான தெரு பகுதியில் இயங்கி வருகிறது இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விஜய் என்ற வாலிபர் அவரது அலுவலகத்தை திடீரென அவர்கள் இல்லாத நேரத்தில் அவர்களின் அலுவலகத்தில் இருந்த முன் பக்க கண்ணாடி மற்றும் அங்கிருந்த பொருட்கள் ஆகியவை அடித்து நொறுக்கி உள்ளார். அப்பொழுது அருகே இருந்த மூதாட்டி ஒருவர் ஏன் இது போல செய்கிறாய் என கேட்டதற்கு அந்த மூதாட்டியை உடைந்த கண்ணாடியை எடுத்து உன்னை குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.இது குறித்து குட்டி என்கின்ற ராகவன் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அந்த புகாரில் விஜய் வயது 20, என்ற நபர் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை ஊசி பழகத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் அவர் அங்கிருந்த பல்வேறு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அந்தப் பழக்கத்தை கற்றுக் தந்ததாகவும் இதனால் ராகவன் மாணவர்கள் இளைஞர்களையும் வழி கெடுக்காதே இதுபோல கெட்ட பழக்கத்திற்கு ஆளாக என இவரை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய் இன்று திருட்டு வழக்கு ஒன்றுக்காக இன்று தான் சிறையில் இருந்து வெளியே வந்து ராகவனின் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து சரித்திர பதிவேடு குற்றவாளியை வலை வீசி தேடி வருகின்றனர்.
Tags : வழக்கறிஞர் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய கஞ்சா போதை ஆசாமி