மிரட்டி பணம் பறிப்பு நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.

by Editor / 28-09-2024 06:12:30pm
மிரட்டி பணம் பறிப்பு நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக,ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். அதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.இதனைத்தொடர்ந்து இன்று தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதும், அமலாக்கத்துறை மீதும் பெங்களூரு திலக் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : மிரட்டி பணம் பறிப்பு நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.

Share via