பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.

by Editor / 28-09-2024 10:36:18am
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்துஅலறியோடிய மக்கள் 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முதல் நாயக்கன் பட்டிபகுதியிலுள்ள  திருமுருகன்  பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்து பட்டாசு ஆலை முழுவதும் வேகமாக பரவியது. தீ ஆலை முழுவதும் பரவிய நிலையில் ஆலையில் இருந்த மற்ற பட்டாசுகளும் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் கரும்புகை சூழந்தது. உடனடியாக சாத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆலையில் உள்ள பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து வருவதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை சுற்றி பயங்கர அதிர்வு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அனுப்ப தயாராக இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. மேலும், இந்த பட்டாசு ஆலையில், 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. தீயை முற்றிலும் அணைத்த பின்னரே உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயின் தீப்பிழம்புகள் மற்றும் புகைமூட்டம் விண்ணை தொடுமளவுக்கு இருந்தது.தொழிலாளர்கள் உயரிக்கு அஞ்சி அலறியடித்து ஓடிய காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.

 

Tags : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து!

Share via