தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

by Staff / 11-10-2024 02:56:54pm
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. தமிழ்நாட்டில் அக்.11, 14, 15 ஆகிய 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (அக். 11) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via