ராவணன் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது: சீமான்

by Staff / 18-10-2024 01:59:11pm
ராவணன் அவமதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது: சீமான்

ராவணன் அவமதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் வருகிற அக்., 27 அன்று ராவண வதம் என்ற பெயரில் சிலர் நிகழ்வு ஏற்பாடு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. உலகின் எந்த மூலையில், எந்த வடிவில் தமிழர் மூதாதை ராவணப்பாட்டன் இழிவுப்படுத்தப்பட்டாலும் அது உலகத்தமிழர் அனைவரையும் அவமதித்து உணர்வுகளைச் சீண்டிப்பார்க்காதீர் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via