வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.,விஜய்வசந்த்

by Staff / 19-10-2024 03:54:43pm
 வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.,விஜய்வசந்த்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய்வசந்த் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2 வது முறையாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக இன்று (19-ம் தேதி) குமரி மேற்கு மாவட்டம் பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,

இந்நிகழ்ச்சியானது திற்பரப்பு அருவி பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் நன்றி அறிவிப்பு பிரச்சார பயணம் துவக்கியது. தொடர்ந்து பிணந்தோடு, திருநந்திகரை, நாகக்கோடு, புலியிறங்கி, குலசேகரம் சந்தை, அரசுமூடு, பொன்மனை உள்ளிட்ட பகுதியில் உள்ள வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார் 1: 00 அளவில் மதிய உணவு அருந்தி விட்டு 2: 30 மணி முதல் சுருளகோடு குருசடி சந்திப்பு, வீரப்புலி, பொன்மனை, மாமூடு, வெண்டலிகோடு, கல்லடிமாமூடு, தொட்டில்பாலம் ஆர்ச் வழியாக தாணிவிளையில் நிறைவு பெறும் வகையில் நன்றி அறிவிப்பு பிரச்சார பயணம் அமைக்க பட்டிருந்தது.

இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால்சிங், வட்டார தலைவர் வினுட் ராய், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், உட்பட இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via