சிகிச்சையில் தாமதம்.. மருத்துவரை தாக்கிய 3 பேர் கைது

by Staff / 24-10-2024 02:30:53pm
சிகிச்சையில் தாமதம்.. மருத்துவரை தாக்கிய 3 பேர் கைது

கேரள மாநிலம் கொல்லத்தில் பாரிப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கிருந்த மருத்துவர் மற்றும் ஊழியர்களை மூன்று இளைஞர்கள் தாக்கினர். சாலை விபத்தில் காயம் அடைந்ததாகக் கூறி சிகிச்சை பெற வந்த 3 இளைஞர்கள் சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டதாகச் சொல்லி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via