3 ஆண்டாக பணிபுரியும்  அரசு ஊழியர்கள் இடமாற்றம்

by Editor / 17-08-2021 03:57:30pm
3 ஆண்டாக பணிபுரியும்  அரசு ஊழியர்கள் இடமாற்றம்



தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு அவற்றில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் முழுமையாக வகுக்கப்படாமல் இருந்தன.இதையடுத்து இந்த 9 மாவட்டங்களிலும் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தமிழக தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து இந்த 9 மாவட்டங்களில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

ஆகவே, இந்த 9 மாவட்டங்களிலும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை வருகிற 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, ஊரக வளர்ச்சித் துறையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அந்த பணிகளை விரைந்து செய்யாமல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்ட நிர்வாகத்தினர் மெத்தனமாக உள்ளதாக சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

 

Tags :

Share via