கவனமும் பொறுப்பும் இல்லாமல் பேசிய சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.

by Editor / 24-01-2025 11:22:49pm
கவனமும் பொறுப்பும் இல்லாமல் பேசிய சீமானுக்கு  சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.

நாதக சீமானுக்கு எதிராக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கோவையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பிரபாகரனின் அண்ணன் மகன் சீமான் மீது எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளை கேள்வியாக புதிய தலைமுறை பெண் செய்தியாளர் முன்வைத்தார். அவரிடம், முகம்சுளிக்கும் வகையில் சீமான் பதிலளித்திருக்கிறார். பெண் செய்தியாளருக்கு பதிலளிக்கிறோம் என்ற கவனமும் பொறுப்பும் இல்லாமல் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags : கவனமும் பொறுப்பும் இல்லாமல் பேசிய சீமானுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்.

Share via

More stories