பொதுநுழைவுத் தேர்வு குறித்து மத்திய அரசு விளக்கம்

by Staff / 25-04-2022 12:15:04pm
பொதுநுழைவுத் தேர்வு குறித்து மத்திய அரசு விளக்கம்

பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு நடைபெறுவதால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார். தமிழகம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர் அனுப்பிய கடிதத்தில் கோச்சிங் முறை ஒழிப்பதே நுழைவுத்தேர்வு நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கை பல்வேறு நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதன் அடிப்படையில் பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 13 மொழிகளில் தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரே விண்ணப்பம் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கல்வி பயிலவும் கட்டண சுமையை குறைத்து கொள்ள முடியும் என்றும் தர்மேந்திர  பிரதான் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via