தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (பிப்., 03) காலை 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
Tags : தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு