பெண் ஏடிஜிபி அறையில் தீ விபத்து - நாசவேலை காரணம் அல்ல

by Staff / 03-02-2025 04:16:35pm
பெண் ஏடிஜிபி அறையில் தீ விபத்து - நாசவேலை காரணம் அல்ல

தன்னை உயிரோடு எரித்துக் கொலை செய்ய சதி நடந்ததாக ஏடிஜிபி கல்பனா நாயக் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், நாசவேலை காரணமல்ல என்று டிஜிபி விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏடிஜிபி அறையில் மின்கசிவு ஏற்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாக தடயவியல் துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கின்றன. அவர் அறையில் வேண்டுமென்றே தீ வைப்பு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை" என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via