பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதிக்கு பலத்த பாதுகாப்பு.

by Editor / 07-07-2024 10:04:00am
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதிக்கு பலத்த பாதுகாப்பு.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ,அவரின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது .இதற்கிடையே பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி மறுத்ததை தொடர்ந்து உடலை வாங்க மறுத்து மருத்துவமனைக்கு முன்பு கூடி உறவினர்களும் அக்கட்சி தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ., கட்சி அலுவலகத்திலேயே உடலை அடக்கம் செய்ய அனுமதி கோாிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 8:30 மணிக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.. நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றதை அறிந்து பகுஜன் சமாஜ் தொண்டர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதை அடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடல் எடுத்துச் செல்லப்பட்டது..அவரது  உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக  பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று  காலை சென்னைக்கு வர உள்ளார். இதனால் பெரம்பூர் பகுதியில்காவல் துறையினரால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Tags : பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி சென்னைக்குபலத்த பாதுகாப்பு

Share via