5 பெண் போலீசார் மீது ஆசிட் வீச்சு
குஜராத்தின் காந்திநகர் அடுத்த கலோலில் ஒரே நேரத்தில் 5 பெண் காவலர்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, ஒரு ரிக்ஷாகாரர் ஆசிட் பாட்டிலுடன் வந்து, ஒரே நேரத்தில் பெண் காவலர்கள் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்தத் தாக்குதலில் ஒருவர் பலத்த தீக்காயம் அடைந்தார். அவர் காந்திநகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags :



















