திருமணமான 18 நாளில் புது மாப்பிள்ளை தற்கொலை
கோவை குனியமுத்துார் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவருக்கும் சூலுார் மதியழகன் நகரை சேர்ந்த ரோகிணி (26), என்பவருக்கும் கடந்த, 1ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்கள் வெள்ளலுார் அவுசிங் யூனிட்டில் வசித்து வந்தனர். ரோகிணி சூலுாரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ரோகிணி வழக்கம் போல பணிக்கு சென்றார். வீட்டில் முருகானந்தம் தனியாக இருந்தார். அப்போது விரக்தியடைந்த அவர் திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போத்தனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கினற்னர். திருமணமான, 18 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags :